பூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான ஒரு சதியாலோசனை கோட்பாடு பற்றியது தான் இந்த தொகுப்பு..!
அதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன..! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
ஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர். நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட்..!
7 ஆதாரங்கள் :
நிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..! ஆதாரம் #1 :
1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது. அதிர்வொலி : அந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது. மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்டமான நீரியல் தடை : மோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.!
ஆதாரம் #2 :
சந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும்..! மேல் பகுதி : முதலில் சோவியத் அறிவியல் அகாடமி,நிலவின் மேல் பகுதி மிகவும் தடினமாக இருப்பது எதனால்?, உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன? போன்ற பல கேள்விகளை கிளப்பியது. பதப்படுத்தப்பட்ட உலோகங்கள் : சில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அணுசக்தி : யுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..? கதிரியக்க மாழை : அணு உலை தயாரிப்பு மற்றும் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது..? இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.
ஆதாரம் #3 :
பிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது. குறைந்த தீவிரம் : நிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறர்கள். தொடர் புள்ளிகள் : நிலவின் பெருந்திரள் செறிவானது மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.
ஆதாரம் #4 :
சந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது..! 800,000 ஆண்டுகள் : விஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..!
ஆதாரம் #5 :
நிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்..! பிற நிலவின் பண்பு : அதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை. ஒரு புறம் மட்டும் : எல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.
ஆதாரம் #6 :
சில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் "டைட்டானியம் மிகுதி" பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விண்கலம் தயாரிக்க : பூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. உருவானது எப்படி : நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் டைட்டானியம் உருவானது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.
ஆதாரம் #7 :
நிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது.
புதிர் :
நிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான்..! இதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..!
மேலும் இதனை வலுவூட்ட அமெரிக்காவின் அப்போலோ 11 மூன் லேண்டிங் ஆனது முழுக்க முழுக்க ஒரு போலியான சம்பவம் என்று சீன விண்வெளி திட்ட உயர் அதிகாரிகள் பெய்ஜிங் டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கைகு பேட்டி அளித்துள்ளனர்
1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 (Luna 2) விண்கலம் தான் நிலவை சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாகும். அதன் பின்பு சரியாக 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலமானது மனிதர்களை நிலவில் தரை இறக்கியது, பின்பு ஜூலை 24, 1969ல் அப்போலோ 11 பூமிக்கு திரும்பியது - இதுதான் நாம் அறிந்த 'மூன் லேண்டிங்' வரலாறு..!
இந்த குறிப்பிட்ட வரலாறு அதாவது, அமெரிக்கா நிலவுக்கு போன சம்பவம் ஆனது முழுக்க முழுக்க ஒரு நாடகம், ஒரு போலியான கதை என்றும் அமெரிக்கா நிலவிற்கு போகவே இல்லை என்றும் இன்றுவரையிலாக பெரும்பாலானோர்களால் நம்பப்படுகிறது. அதற்கு ஏகப்பட்ட பலமான ஆதரங்களும், சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. அவைகளை மேலும் பலப்படுத்தும் வண்ணம் அதிரடியான ஆதாரம் ஒன்றை சீனா அம்பலப் படுத்தியுள்ளது..!
சீனாவின் லூனார் ரோவர் மூலம் கிடைக்கப்பெற்ற நிலவு புகைப்படங்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தான் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திடமும், நாசாவிடமும் நிலவில் இறங்கியதற்க்கான துல்லியமான விளக்கம் கேட்டு மனு ஒன்றில் 200 சீன விண்வெளி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அதாவது அமெரிக்கா நிலவிற்கு வந்ததற்கான எந்த விதமான 'அடையாளமுமே' அங்கு இல்லை என்பது சீன லூனார் ரோவர் (Lunar Rover) ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் நிலவில் கால் தடம் பதித்தது போலியான நிகழ்வு இல்லை என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது என்றும் சீன விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
சீன லூனார் ரோவர் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, அங்கு வரலாறு கூறுவது போல அமெரிக்கா தரை இறங்கியதற்கான எந்த விதமான அடையாளமும் இல்லை என்பதை சீனா உறுதி செய்துள்ளது.
நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்பியது யூட்டு (Yutu) விண்கலம் என்பதும். இது 2013-ஆம் ஆண்டு நிலவில் தரை இறங்கியது என்பதும் குறிபிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற ரஷ்ய அணு பொறியாளர் யூரி இக்னாட்யெவிச் முக்ஹின் (Yuri Ignatyevich Mukhin) உட்பட மேலும் பல ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிகளும் அமெரிக்க விளக்கத்திற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த விசயத்தில் ரஷ்ய அரசாங்கமானது, 1970 -ஆம் ஆண்டில் இருந்தே பெரிய அளவிலான ஆர்வத்தை காட்டி வருகிறது. ஏனெனில், அந்த காலகட்டத்தில் யார் முதலில் நிலவை அடைவது என்ற விண்வெளி போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றது அமெரிக்கா தான்..!
அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' பொய், படம் பிடிக்கப்பட்டவைகள், புரளிகள் என்று கூறும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் (Conspiracy theorists) குறிப்பிடும் ஆதாரங்கள் தான் கீழ் வரும் இவைகள்.
காற்றில் ஆடும் அமெரிக்க கொடி
அமெரிக்கா நிலாவில் முதல் கால் தடம் பதிக்கும் நிகழ்ச்சியானது நேரடி ஒளிப்பதிவில் இருந்தது, அதில் நிலவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க கொடியானது காற்றில் ஆடுவதை தெளிவாக காண முடிந்தது.
பள்ளங்கள் இல்லாமை
அப்பலோ விண்கலம் நிலவில் தரை இறங்கியதற்க்கான எந்த விதமான பள்ளமும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் என எதிலும் இல்லை. இறக்கி வைக்கப்பட்டது போல் தான் காட்சியளிக்கிறது.
பல கோணங்களில் ஒளி ஆதாரம்
ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைப்பதின் மூலம் இது படடமக்கப்பட்டது என்கிறார்கள் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.
வான் அலென் ரேடியேஷன் பெல்ட்
முதல் முயற்சியிலேயே 'வான் அலென் ரேடியேஷன் பெல்ட்' என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர்வீச்சை தாண்டி எப்படி நிலாவிற்கு சென்றனர் என்பது இன்றும் கேள்வி குறி தான்..!
விளக்கமில்லாத பொருள்
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் விளக்க முடியாத பொருள் ஒன்று பிரதிபளிக்கிறது.
மறைக்கப்பட்ட கேபிள்கள்
நிலவின் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி விண்வெளி வீரர்கள் கேபிள்களில் இணைக்கப்பட்டு குதித்து குதித்து செல்லப்பட்டனர் என்றும், சில புகைப்படங்களில் கேபிள்களை தெளிவாக பார்க்க முடிகின்றது என்றும் கூறுகிறார்கள்.
நட்சத்திரமின்மை
வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிவிலும் எந்தவொரு ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.
சி' பாறை
வெளியான நிலவில் இறங்கிய புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறான முறையில் தெளிவாக 'சி' (C) என்ற எழுத்தை பிரதிபலிக்கும் பாறை..!
பொய்யான கிராஸ்-ஹேர்ஸ்
வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.
போலியான பின்னணிகள்
ஒரே மாதிரியான பின்புலம் (Backdrop) கொண்ட பல வீடியோ காட்சிகள்..!
இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அமெரிக்கா நிலாவிற்கு சென்றதை, 20% அமெரிக்கர்களே நம்பவில்லை என்கிறது ஒரு ஆய்வு.
மூன் லேண்டிங் உண்மை என நாசா வெளியிட்ட வீடியோ.
வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர். யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம். மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன. சித்தர் பாடல்களில் ஹோமம்! தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர்.நான் பார்த்த வரையில் அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது. அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார். பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும் பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால் நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும் நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள் கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து சிவசிவா விசயோகத் திறத்தைகாணே. - அகத்தியர் - ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு... "ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்" "வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்" "நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்" "நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்" பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை. ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது. ஹோம குண்டங்களின் வடிவங்கள் : சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம். ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார். "தானான தீபமடா மந்திரபீடம் சராசரத்துக் குயிரான மந்திரபீடம் வானான அண்டமடா மந்திரபீடம் மகத்தான ரவிமதியு மந்திரபீடம் சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே" - அகத்தியர் - ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன... முக்கோணம்.. நாற் கோணம்.. ஐங்கோணம்.. அறுகோணம்.. எண்கேணம்.. வட்டம்.. ஹோமங்களின் அறிவியல் : சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன. ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன. ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம். இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன். ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்? யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது. பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம். அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர். "நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு நலமான அரசினொடு மாவின் சுப்பி சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி கண்மணியே பேயத்திச் சுப்பியோடு நப்பென்ற கடுகுரோ கணியும் கூட நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே" - புலிப்பாணிச் சித்தர் - "கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி கெடியான அரசுடனே வில்வம் யெட்டி வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும் வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர் நாளப்பா துட்டகண பூதமெல்லாம் நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே" - அகத்தியர் - இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு... ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும். இது தொடர்பான முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம். மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர். குருவருளை வேண்டி வணங்கி இந்த ஹோமங்களை யாரும் செய்திடலாம். தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம் எதுவும் இதில் இல்லை. அந்த வகையில் முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம். சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில் பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார். "காணவே இன்னமொரு கருமானங்கேள் கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து பிலமான அக்கினியை லரசால்செய்து பூணவே புவனையுட மந்திரந்தன்னால் புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு தோணவே கிரகமதில் நின்றதோஷந் சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே" - அகத்தியர் - என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு. "ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா" தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர். அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்! திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது. எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். சித்ததான சித்துகளுக் குறுதியான சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண வத்தாத பாக்கியசந் தான பாக்கியம் வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே. - அகத்தியர் - கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும். அக்கினியின் மூலமந்திரம்... "ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா" தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்... "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே... நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்! மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார். ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன் பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி பின்வருமாறு விளக்குகிறார். "ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால் நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால் வாமப்பால் மந்திரகலை வாமபோதம் வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே" - அகத்தியர் - முக்கோணம் வடிவத்தை உடைய ஓம குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார். நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம். இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும் இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்! இன்று வெளியாவதாக இருந்த “செல்வம் தரும் ஹோமம்” பற்றிய பதிவு நாளை வெளியாகும். இன்றைய பதிவில் புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி பார்ப்போம். முந்தைய மூன்று பதிவுகளிலும் புவனையின் மூல மந்திரங்களை ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில் பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான் மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான். இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தந்து அவளின் அருளைப் பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன். சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை என்பவள் குழந்தை வடிவத்தையுடைய தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம். அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார். "பாரப்பா யின்னமொரு பாகங்கேளு பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண வீரப்பா கொண்டதொரு அபமிருத்து மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே நேரப்பா அபமிருத்து விலகித்தானால் நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு காரப்பா கருணைவளறர் புவனைதன்னால் கண்காண இன்னம்வெகு கடாட்சமே" - அகத்தியர் - இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார். தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை போட்டுக் கொண்டே புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார். அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார். நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம். பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்! பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார். "காணவே யின்னமொரு சூட்சங்கேளு கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது பூணவே கண்ணாரக் கண்டபாவம் புத்தியுடன் மனதாரச் செய்தபாவம் பேணவே காதாரக் கேட்டபாவம் பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம் ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம் ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே" - அகத்தியர் - வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார். அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம். "ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால் சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால் சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே" - அகத்தியர் - மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம் தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார் அகத்தியர். "நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக தீராத பாவமெல்லாந் தீருந்தீரும் மெய்யடா பிரமையொடு சகலரோகம் விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால் மய்யமென்ற புருவநடு உச்சிமீதில் மகத்தான கற்பூர தீபந்தன்னால் அய்யனே உனதுடைய சமூகங்கண்டால் அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே" - அகத்தியர் - இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன் மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம். இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும் செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார் அகத்தியர். 300 வயதுவரை வாழவைக்கும் ஹோமம்? நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம். "அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால் அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா சிறப்பான ஓமமது தீர்க்கமாக வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில் மகத்தான பிரமமய மாவாய்பாரு இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால் என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே" - அகத்தியர் - அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர். அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்! நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார். "பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான் பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து நலமான அக்கினியை லரசால்செய்து பூணவே புவனையுட மந்திரந்தன்னால் புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே" - அகத்தியர் - அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார். நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக் குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம். ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்! அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதுகாரும் அகத்தியர் அருளிய சில அரிய ஹோம முறைகளைப் பகிர்ந்து கொண்டேன். தொடரின் சுவாரசியம் கருதி இன்றுடன் ஹோமங்கள் பற்றிய பதிவுகளை நிறைவு செய்கிறேன். கடந்த பதின்மூன்று பதிவுகளின் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நண்பர்கள் சிலர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு என்னாலான தெளிவுகளை இன்றைய பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன். இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது. இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு. ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம். ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது. என் வரையில் ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் நானறிந்த தெளிவுகளை பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன். கார்ய சித்திக்கு – கணபதி யாகம். க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம். ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம். ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம். ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம். சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம். கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம்,மற்றும் ஹயக்ரீவர் யாகம். செய்வினை,மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம். சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம். பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி. திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம். ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம். புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம். சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம், அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம். ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.
காயத்ரி ஹோமம் நாள் : தினந்தோறும் நேரம் :சூர்ய உதயம் & சூர்ய அஸ்தமனம் விக்னேஸ்வர பூஜை சஹஸ்ரகாயத்ரி ஹோமம் பூர்ணாஹுதி சாந்தி மந்திரம் ************************************************************************************ காயத்ரி மந்த்ரம் (காஞ்சி பரமாச்சார்யாள் அருளிய “தெய்வத்தின் குரல்” புத்தகம் மற்றும் பிற உரைகளிலிருந்து தழுவியது) காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்’ என்றே குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம், சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது. பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம். “காயந்தம் த்ராயேத இதி” என்பதன் பொருள் “மந்திரம் ஜபிப்பவரை காக்கும்”. இதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராண சக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். காயத்ரீ அல்லாத பல வித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத் தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன். திருவள்ளுவர், 34 வது குறளில் மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற என்று கூறியுள்ளார். காயத்ரி ஜபம் ஏன் செய்யவேண்டும் ? காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால் தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது. காயத்ரீ ஜபத்தை விடாமல் செய்வதாலேயே க்ஷேமம் உண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் மற்றவர்களுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும். மனு நீதியில் (11.225) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது सावित्रीं च जपेन्नित्यं पवित्राणि च शक्तितः । सर्वेष्वेव व्रतेष्वेवं प्रायश्चित्तार्थमादृतः ॥ ஸாவித்ரீம்ʼ ச ஜபேன்னித்யம்ʼ பவித்ராணி ச ஶக்தித꞉ . ஸர்வேஷ்வேவ வ்ரதேஷ்வேவம்ʼ ப்ராயஶ்சித்தார்த²மாத்³ருʼத꞉ தினமும் காயத்ரீ மந்திரத்தை முடிந்த வரை அதிகபட்சமாக ஜபிக்க வேண்டும். இந்த விதிமுறையை எல்லா பிராயச்சித்த விரதங்களிலும் அனுஷ்டிக்க வேண்டும் ஏன் ஒவ்வொரு நாளும் மந்திரம் ஓதவேண்டும் ? உலக நீதி ஆசிரியர், உலகநாதர் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். வேதமும், “வேதோ நித்யம் அதீயதாம் : தத் உதிதம் கர்மஸு அநுஷ்டீயதாம்” – தினமும் வேதம் ஒதுங்கள் ; அதில் சொல்லியிருக்கிற யக்ஞாதி அநுஷ்டானங்களை நன்றாகப் பண்ணுங்கள் ” என்று சொன்னது. சித்த சுத்தியை உத்தேசித்துத் தான், வேத கர்மாக்களை செய்யவேண்டும் . ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அது போல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை ஒரு நாளும் விடக் கூடாது. மருந்தைவிட இது தான் முக்கியமானது. மந்திரத்தின் பலன் வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதினால் சித்தத்திற்கு ஒவ்வொரு விதமான விகாரங்கள் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் சோம்பல் விகாரங்களும், சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், சோம்பல் / கோப விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவு உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன. சாந்தம் ஏற்படும் போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை, சில நாடிகள் குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம் தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்திவிட்டால், காமக் குரோதங்களையோ, சாந்தத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருள்கள் தேவையில்லை. இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும் போது நமது நாக்கு, உதடு, மேல்வாய் ,கீழ்வாய், கண்டம் முதலியவைகளின் இடைவெளி வழியாக ப்ராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுது தான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷரத்வனிக்கு காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் ஸம்பந்தப்படும் நாடிகளில் சலனம் ஏற்படுகிது. நாடிகளில் சலனத்தினால் மனஸில் எந்த விதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பரலோக க்ஷேமமாகிய மோக்ஷம் முதலிய புண்யமும் ஏற்படவேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாரணங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறு விதமான உச்சாரணங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள். மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) “மனனாத் த்ராயதே” என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம். அவைகளின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித் திருப்பி சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத் தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை. வேத மந்திர சப்தம் அதைச் சொல்கிறவனுக்குள்ளே நல்ல நாடி சலனங்களை உண்டு பண்ணுவதோடு, கேட்கிறவர்களுக்கும் அப்படிப்பட்ட சலனத்தை உண்டுபண்ணுவது. அதன் சப்தம் நம்முடைய நாடிகளிலும், வெளி லோகத்திலும் (atmosphere) ஏற்படுத்தும் சலனங்களால் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் உண்டாகிறது. லோக க்ஷேமம் என்றால் மநுஷ்யர்களின் க்ஷேமம் மட்டுமில்லை. ஸகல பிராணி வர்க்கங்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது. மந்திரப் பலன் மனிதருக்கு மட்டும் தானா ? “தே த்விபாத் சதுஷ்பாத்” – இருகால் பிராணி, நாலுகால் பிராணி எல்லாம் க்ஷேமமாக இருக்க வேதம் பிரார்த்திருக்கிறது. புல், புண்டு, விருக்ஷம், மலை, நதி ஆகிய எல்லாவற்றின் நன்மையையும் கோருகிறது. இந்த ஸமஸ்தப் பிராணிகளின் க்ஷேமம் வேதத்தின் சப்த விசேஷத்தாலேயே நடந்து விடுகிறது. சப்த சலனமான மந்திரங்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதே இல்லை. பிரகிருதத்தில் (நடைமுறை வாழ்க்கையில்) பார்த்தாலும், வார்த்தையோ அர்த்தமோ இல்லாமலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணிக் கேட்கிறபோது, அதன் வெறும் சப்தம் மட்டுமே நமக்கு ஆனந்தம், துக்கம் முதலான உணர்ச்சிகளைத் தருகிறது. வாத்ய ஸங்கீதம் என்பதாலேயே வார்த்தையோ அர்த்தமோ முக்கியமில்லை என்று தெரிகிறது. வேதத்தில் என்ன விசேஷம் என்றால் அதன் சப்தத்துக்கே தனியாக சக்தி இருப்பது மட்டுமின்றி, வார்த்தைகளாகவும் அதற்கு மிக உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. மந்திர மகிமையில் பட்ட மரம் கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில் பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஜம்பு என்கிற வெண் நாவல் மரம் தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேஸ்வரம் என்று பெயர் இருக்கிறது. அங்கிருந்தே ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டையாகத் தான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக்கொண்டிருந்த சமயத்தில், இந்த மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள். மந்திர சக்தியால் அப்போழுதே அது தளிர்த்தது. இந்திய விஞ்ஞானியான ஜெகதீஷ் சந்திர போஸ், லண்டனில் பல விஞ்ஞான அறிஞர்களின் முன்னிலையில் தன்னுடைய “க்ரெஸ்கோக்ராப்’ கருவியை சோதனைப்படுத்தி, தாவரங்களும் உணரக்கூடியவை. மனிதர்களைப் போல அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபித்தார். வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன. சப்தத்துக்கு சிருஷ்டி சக்தி உண்டு என்பதை நிரூபித்தார். வருண ஜபம் செய்தார்கள். மழை பெய்தது என்று படிக்கிறோம். இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள். குணமாகாமல் இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா. மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது. எவ்வளவு முறை ஜபிக்க வேண்டும் ? தேவீ பாகவத புராணத்தில் ( 9.26) கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது ஒரு முறை காயத்ரி ஜபித்தால் ஒரு தினம் செய்த பாபத்தை அழிக்கும். 10 ஜபித்தால் இரவு பகல் செய்த பாபத்தை அழிக்கும் . 100 ஜபித்தால் 1 மாத பாபத்தை அழிக்கும் . 1000 ஜபித்தால் 1 வருட பாபத்தை அழிக்கும் . 1 லட்சம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபத்தை அழிக்கும் . 10 லட்சம் ஜபித்தால் முன் ஜன்ம பாபத்தை அழிக்கும் . 100 லட்சம் ஜபித்தால் எல்லா ஜன்ம பாபாத்தை அழிக்கும் . மேலே சொன்னதை 10 மடங்கு ஜபித்தால் பிறப்பு இறப்பை அழிக்கும் . ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்; கோவிலில் ஏன் ஜபம் செய்ய வேண்டும் ? பிருஹத் யோகி யாக்யவல்க்ய ஸ்ம்ருதியில் (7.143) கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது. “வீட்டில் ஜபிப்பது ஒரு மடங்கு பலனும், நதிக்கரையிலோ/குளக்கரையிலோ ஜபிப்பது இரு மடங்கு பலனும், பசு மாட்டு தொழுவத்தில் ஜபிப்பது பத்து மடங்கு பலனும், யாகசாலையில் ஜபிப்பது நூறு மடங்கு பலனும், புண்ணிய க்ஷேத்திரத்தில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனும், கோவில் சன்னதியில் ஜபிப்பது கோடானு கோடி மடங்கு பலன் தரக்கூடியது.” திருவள்ளுவர், 264 வது குறளில் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் பரிமேலழகர் உரை: ஒன்னார்த் தெறலும் – அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் – அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் – தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப என தொல்காப்பியர் கூறுகிறார். திருமூலர் (பத்தாம் திருமுறை 24வது பாடலில்) கூறுகிறார் நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே (பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப் பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.) உலக நன்மை, அமைதி மற்றும் மழை வேண்டி, இந்த ஹோமம் நடைபெறுகிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் பங்கேற்று மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி ************************************************************************************ தர்ம ரக்ஷணம் பற்றி காஞ்சி மஹான் தர்ம ரக்ஷணத்திற்காக என்னாலானதைத் செய்ய வேண்டும் என்று ஓயாமல் நினைத்துக்கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இலக்கு ரொம்பவும் எட்டத்தில் தான் இருக்கின்றது . என் ப்ரயத்தனத்தை விட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகிப் போய்க் கொண்டிருக்கின்றது. அதற்காக, இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்பொழுது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று விட்டு விடவும் கூடாது. அனாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும் பரிபாலித்து வந்திருப்பதுமான தர்மங்களை நான் வாரிக் கொடுத்து விட்டால் அதை விடப் பெரிய தோஷம் இல்லை. கீதையில் சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டு விட்டு நான் பாட்டுக்கு முன் வைத்தைக் காலைப் பின் வைக்காமல் என் ப்ரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டே தான் போக வேண்டும். ரிசல்ட் என்னுடைய ‘ஸின்ஸியரிடி’யையும் (sincerity) , அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸியரிடி போதவில்லை, என் மனசு சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றே அர்த்தம் .