ஒலிக்கு மகிமை உண்டா?
ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா? ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?
மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?
க்ளாட்னி ப்ளேட்ஸ்
ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!
க்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!
நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு
மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.
காவராண்ட் ஆராய்ச்சி
இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.
ஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின் அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன் இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக் கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும ஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள் துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின!
சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு மேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை அதிகம்!
நாஸாவின் கண்டுபிடிப்பு
ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!
கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்
இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.
எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள் பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.
ஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும் புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.
காயத்ரி மந்திர மகிமை
அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார். வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது!
க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி. மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.
https://www.sciencefriday.com/articles/seeing-the-patterns-in-sound/
மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?
க்ளாட்னி ப்ளேட்ஸ்
ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை ‘இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!
க்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!
நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு
மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.
காவராண்ட் ஆராய்ச்சி
இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.
ஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின் அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன் இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக் கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும ஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள் மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள் துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின!
சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு மேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை அதிகம்!
நாஸாவின் கண்டுபிடிப்பு
ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!
கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்
இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.
எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு¨றையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள் பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.
ஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும் புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.
காயத்ரி மந்திர மகிமை
அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார். வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது!
க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி. மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.
https://www.sciencefriday.com/articles/seeing-the-patterns-in-sound/
குழந்தையின்மையால் நெருக்கடிக்குள்ளாகும் பாலுறவு
திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்தனர். கணவன் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், மனைவி தகவல் தொழில்நுட்ப வல்லுனராகவும் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். கணவனுக்கு முப்பது வயது இருக்கலாம், அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.
பெண்ணின் முகத்தில் இன்னமும் கொஞ்சம் குழந்தைத்தன்மை மிச்சமிருந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கடந்த ஆறுமாத காலமாகப் பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் வைத்தியம் பார்த்துவருகிறார்கள். நான் அவர்களுக்கு அதுவரை அளிக்கப்பட்ட வைத்தியங்களைப் பார்த்து அதில் எந்தக் குறிப்பிடத்தக்க பிரச்சினையும் இல்லாததைக் கவனித்துவிட்டு அவர்களிடம் கேட்டேன், “கடைசியாக எப்போது செக்ஸ் வைத்துக்கொண்டீர்கள்?”
அந்தப் பெண் துல்லியமாக ஒரு தேதியைச் சொன்னாள். “அதுக்கு முன் எப்போது?” என்று கேட்டதும், “இருபத்திரண்டாம் தேதியிலிருந்து இருபத்தைந்தாம் தேதி வரை மூன்று நாட்களும் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டோம்” என்று இப்போதும் அந்தப் பெண்தான் சொன்னாள். அவள் துல்லியமாக தேதி சொல்லியது குறித்து அவளிடம் கேட்டேன். “மாதமாதம் கிட்டத்தட்ட அந்த தேதியில்தான் மூன்று நாள் கூடுவோம். மீதி நாட்கள் கூடாது என்று எங்கள் டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள். “கடைசியாக எப்போது முழுமையான திருப்தியோடு உறவு வைத்துக்கொண்டீர்கள்?” எனக் கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை.
குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் மீதான கவர்ச்சியும் இல்லை; ஒரு சடங்கைப் போல அவர்களுக்கிடையேயான பாலுறவு இருக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தம்பதிகளுக்கிடையேயான பாலுறவு தான் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாலுறவுதான் குழந்தை பிறப்பதையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதுதான் இதில் உள்ள முக்கியமான சிக்கல்.
பாலுறவற்ற திருமணங்கள்
குழந்தையின்மையை வெறும் மருத்துவச் சிக்கலாக மட்டும் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் பாலுறவு, குழந்தைப்பேறு போன்றவற்றின் மீது இங்கு ஏராளமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவை அத்தனையையும் நாம் உணர்ந்துகொண்டால்தான் அதற்கான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, இது எதையும் புரிந்துகொள்ளாத நிலையில்தான் இன்றையை குழந்தையின்மைக்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன.
பாலுறவற்ற திருமணங்கள்தான் (Unconsummated marriage) குழந்தையின்மைக் கான முக்கியமான காரணமாக இருக்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்குக் காரணம், ‘ஒரு முழுமையான பாலுறவு’ என்றால் என்ன என்பதே இங்கு பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியாது. பாலுறவின் மீதான எதிர்மறை எண்ணங்கள், அருவருப்பு, குற்றவுணர்வு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகின்றன.
அதைப் பற்றி பேசுவதோ தெரிந்துகொள்வதோ ஒழுக்கமின்மை எனச் சொல்லி வளர்க்கப்படுபவர்கள் எப்படி திருமணத்துக்குப் பிறகு திடீரென ஒருநாள் முழுமையாகத் தெரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? அதேபோல, குழந்தைகளின் மீதான சிறுசிறு பாலியல் வன்கொடுமைகள் இங்கேதான் அதிகமாக நடக்கின்றன. அதன் விளைவாக, அந்தக் குழந்தைகளுக்குப் பாலுறவின் மீதான அச்சம் மனதில் படிந்துவிடுகிறது.
அவர்களால் திருமணத்துக்குப் பிறகும் முழுமையான பாலுறவில் ஈடுபட முடிவதில்லை. குழந்தையில்லை என்று தம்பதிகள் வரும்போது அவர்களுக்கிடையேயான பாலுறவு முழுமையானதாக இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதன்மையானது. ஆனால், நமது குழந்தையின்மைக்கான வைத்தியம் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. அதனால், அதற்கான எந்த விசாரணையும் குழந்தையின்மைக்கான வைத்திய முறைகளின் உள்ளடக்கத்தில் இல்லை.
பாலுறவின் முதன்மை நோக்கம்
மனிதனின் பரிணாமத்தில் பாலுறவின் முதன்மையான நோக்கம் மற்ற விலங்குகளைப் போல குழந்தை பெறுவதல்ல. தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பையும், காதல் நிறைந்த பிணைப்பையும் மேம்படுத்துவதே. ஆனால், இன்றைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாகக் குழந்தையின்மை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பாலுறவு என்பதே குழந்தை பெறுவதற்கான உத்தி மட்டுமே என்று பார்க்கப்படுவதால் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் உள்ள நாட்களில் மட்டுமே பாலுறவு வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதுவும் குறிப்பிட்ட முறைகளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிலையில் எனப் பல நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில மருத்துவமனைகளில் ஸ்கேன்செய்து பார்த்துவிட்டு அங்கேயே, அப்போதே உடனடியாகப் பாலுறவு வைத்துகொள்ளச் சொல்வதாகவும் கேள்விப்பட்டது உண்டு. ஒரு குழந்தையின் நிமித்தமாகப் பாலுறவின் மீது கொடுக்கப்படும் இத்தகைய அழுத்தங்களின் விளைவாக இயல்பான ஆர்வம், கவர்ச்சி, இன்பம் எல்லாம் குறைந்துபோய் அதை ஒரு மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வதைப் போல பாவிக்கின்றனர். இப்படி ஒரு வெளிப்புற அழுத்தத்தின் பேரில் நிகழும் பாலுறவு எப்படி அவர்களுக்கிடையேயான அன்பையும் பிணைப்பையும் பலப்படுத்தும்?
இங்கு தம்பதிகள் குழந்தை பெற முடியாமல் போகும்போது அவர்கள் அதைத் தங்களது தனிப்பட்ட தோல்விகளாகவும் பலவீனங்களாகவும் நினைக்கின்றனர். தங்களது பாலினம் மேல் அதுவரை இருந்துவந்த ஈர்ப்பும் கர்வமும் உடையத் தொடங்குகின்றன. தனது ஆண்மையிலிருந்து தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் ஆண் கோபம், வன்முறை போன்றவற்றை வலிந்து தனக்குள் திணித்துக்கொள்கிறான்.
ஒரு பெண் குழந்தையின்மைக்கான முழு பொறுப்பையும் தானே சுமந்துகொண்டு அதன் நிமித்தம் அதீத படபடப்புடனும் பயத்துடனும் எப்போதும் இருக்கிறாள். இந்த பயத்தின் வழியாகவே அவள் இதிலிருந்து வெளியேறும் வழியையும் நம்பிக்கையற்றுத் தேடத் தொடங்குகிறாள்.
இருவரது இந்த அசாதாரண மனநிலைகளுமே இயல்பான பாலுறவை அவர்களுக்கு சாத்தியமற்றதாக மாற்றிவிடுகிறது. பாலுறவு என்பதையும் தாண்டி அவர்களுக்கிடையேயான உறவும்கூட இதனால் சீர்குலையத் தொடங்குகிறது. பரஸ்பரப் புரிதலும் அன்பும் இல்லாமல் வெறுமையும் வெறுப்பும் பழிசொல்லுதலுமே பிரதானமாக இருக்கும் உறவின் வழியாகக் கனிந்த பாலியல் உறவை மீட்பது அத்தனை எளிதானதல்ல. ஆனால், அதைச் செய்வதுதான் குழந்தையின்மை மருத்துவத்தில் முதல் படியாக இருக்க வேண்டும்.
இயந்திரத்தன பிணைப்பு கூடாது
குழந்தையின்மைக்கான இன்றைய மருத்துவம் அனைத்து வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் உடல் வாதைகளையும் மனவுளைச்சலையும் தரக்கூடியது. பரஸ்பர அன்பும் ஆதரவும் வேறு எப்போதையும்விட மிக அதிகமாக இருவருக்கும் தேவைப்படும் காலகட்டம் அது.
அதைக் கொடுக்கும் இடத்தில் இருவரும் இருக்க வேண்டும். நிபந்தனையற்ற உரையாடலும் முதிர்ச்சியான புரிதலும் சமரசமற்ற ப்ரியமும் அதற்கு அவசியமானது. உடல்களுக்கிடையேயான இயந்திரத்தனமான பிணைப்பை மட்டுமே கொண்ட பாலுறவில் அது சாத்தியமில்லை. மாறாக, மன ஒத்திசைவோடு அமைந்த பாலுறவே ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும். அதன் வழியே குழந்தை யின்மைக்கான தீர்வையும் நாம் அடைய முடியும்.
என்னிடம் வந்த தம்பதியினரிடம் அனைத்து பரிசோதனைகளையும் வைத்தியங்களையும் உடனடியாக நிறுத்தச் சொன்னேன். அவர்களின் பாலுறவு மீது திணிக்கப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டு, விரும்பும் நேரத்தில் இயல்பான பாலுறவை எந்த நிர்ப்பந்தங்களுமற்று அனுபவிக்கச் சொன்னேன். அது அவர்களின் குழந்தையின்மை நெருக்கடிகளிலிருந்து மட்டுமல்ல, அவர்களது மகத்தான உறவையும் நிச்சயம் மீட்டுக்கொண்டுவரும்.
- சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர், எழுத்தாளர்.
நன்றி : இந்துதமிழ்
பெண்ணின் முகத்தில் இன்னமும் கொஞ்சம் குழந்தைத்தன்மை மிச்சமிருந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கடந்த ஆறுமாத காலமாகப் பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் வைத்தியம் பார்த்துவருகிறார்கள். நான் அவர்களுக்கு அதுவரை அளிக்கப்பட்ட வைத்தியங்களைப் பார்த்து அதில் எந்தக் குறிப்பிடத்தக்க பிரச்சினையும் இல்லாததைக் கவனித்துவிட்டு அவர்களிடம் கேட்டேன், “கடைசியாக எப்போது செக்ஸ் வைத்துக்கொண்டீர்கள்?”
அந்தப் பெண் துல்லியமாக ஒரு தேதியைச் சொன்னாள். “அதுக்கு முன் எப்போது?” என்று கேட்டதும், “இருபத்திரண்டாம் தேதியிலிருந்து இருபத்தைந்தாம் தேதி வரை மூன்று நாட்களும் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டோம்” என்று இப்போதும் அந்தப் பெண்தான் சொன்னாள். அவள் துல்லியமாக தேதி சொல்லியது குறித்து அவளிடம் கேட்டேன். “மாதமாதம் கிட்டத்தட்ட அந்த தேதியில்தான் மூன்று நாள் கூடுவோம். மீதி நாட்கள் கூடாது என்று எங்கள் டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள். “கடைசியாக எப்போது முழுமையான திருப்தியோடு உறவு வைத்துக்கொண்டீர்கள்?” எனக் கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை.
குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் மீதான கவர்ச்சியும் இல்லை; ஒரு சடங்கைப் போல அவர்களுக்கிடையேயான பாலுறவு இருக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தம்பதிகளுக்கிடையேயான பாலுறவு தான் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாலுறவுதான் குழந்தை பிறப்பதையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதுதான் இதில் உள்ள முக்கியமான சிக்கல்.
பாலுறவற்ற திருமணங்கள்
குழந்தையின்மையை வெறும் மருத்துவச் சிக்கலாக மட்டும் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் பாலுறவு, குழந்தைப்பேறு போன்றவற்றின் மீது இங்கு ஏராளமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவை அத்தனையையும் நாம் உணர்ந்துகொண்டால்தான் அதற்கான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, இது எதையும் புரிந்துகொள்ளாத நிலையில்தான் இன்றையை குழந்தையின்மைக்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன.
பாலுறவற்ற திருமணங்கள்தான் (Unconsummated marriage) குழந்தையின்மைக் கான முக்கியமான காரணமாக இருக்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்குக் காரணம், ‘ஒரு முழுமையான பாலுறவு’ என்றால் என்ன என்பதே இங்கு பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியாது. பாலுறவின் மீதான எதிர்மறை எண்ணங்கள், அருவருப்பு, குற்றவுணர்வு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகின்றன.
அதைப் பற்றி பேசுவதோ தெரிந்துகொள்வதோ ஒழுக்கமின்மை எனச் சொல்லி வளர்க்கப்படுபவர்கள் எப்படி திருமணத்துக்குப் பிறகு திடீரென ஒருநாள் முழுமையாகத் தெரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? அதேபோல, குழந்தைகளின் மீதான சிறுசிறு பாலியல் வன்கொடுமைகள் இங்கேதான் அதிகமாக நடக்கின்றன. அதன் விளைவாக, அந்தக் குழந்தைகளுக்குப் பாலுறவின் மீதான அச்சம் மனதில் படிந்துவிடுகிறது.
அவர்களால் திருமணத்துக்குப் பிறகும் முழுமையான பாலுறவில் ஈடுபட முடிவதில்லை. குழந்தையில்லை என்று தம்பதிகள் வரும்போது அவர்களுக்கிடையேயான பாலுறவு முழுமையானதாக இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதன்மையானது. ஆனால், நமது குழந்தையின்மைக்கான வைத்தியம் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. அதனால், அதற்கான எந்த விசாரணையும் குழந்தையின்மைக்கான வைத்திய முறைகளின் உள்ளடக்கத்தில் இல்லை.
பாலுறவின் முதன்மை நோக்கம்
மனிதனின் பரிணாமத்தில் பாலுறவின் முதன்மையான நோக்கம் மற்ற விலங்குகளைப் போல குழந்தை பெறுவதல்ல. தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பையும், காதல் நிறைந்த பிணைப்பையும் மேம்படுத்துவதே. ஆனால், இன்றைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாகக் குழந்தையின்மை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பாலுறவு என்பதே குழந்தை பெறுவதற்கான உத்தி மட்டுமே என்று பார்க்கப்படுவதால் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் உள்ள நாட்களில் மட்டுமே பாலுறவு வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதுவும் குறிப்பிட்ட முறைகளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிலையில் எனப் பல நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில மருத்துவமனைகளில் ஸ்கேன்செய்து பார்த்துவிட்டு அங்கேயே, அப்போதே உடனடியாகப் பாலுறவு வைத்துகொள்ளச் சொல்வதாகவும் கேள்விப்பட்டது உண்டு. ஒரு குழந்தையின் நிமித்தமாகப் பாலுறவின் மீது கொடுக்கப்படும் இத்தகைய அழுத்தங்களின் விளைவாக இயல்பான ஆர்வம், கவர்ச்சி, இன்பம் எல்லாம் குறைந்துபோய் அதை ஒரு மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வதைப் போல பாவிக்கின்றனர். இப்படி ஒரு வெளிப்புற அழுத்தத்தின் பேரில் நிகழும் பாலுறவு எப்படி அவர்களுக்கிடையேயான அன்பையும் பிணைப்பையும் பலப்படுத்தும்?
இங்கு தம்பதிகள் குழந்தை பெற முடியாமல் போகும்போது அவர்கள் அதைத் தங்களது தனிப்பட்ட தோல்விகளாகவும் பலவீனங்களாகவும் நினைக்கின்றனர். தங்களது பாலினம் மேல் அதுவரை இருந்துவந்த ஈர்ப்பும் கர்வமும் உடையத் தொடங்குகின்றன. தனது ஆண்மையிலிருந்து தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் ஆண் கோபம், வன்முறை போன்றவற்றை வலிந்து தனக்குள் திணித்துக்கொள்கிறான்.
ஒரு பெண் குழந்தையின்மைக்கான முழு பொறுப்பையும் தானே சுமந்துகொண்டு அதன் நிமித்தம் அதீத படபடப்புடனும் பயத்துடனும் எப்போதும் இருக்கிறாள். இந்த பயத்தின் வழியாகவே அவள் இதிலிருந்து வெளியேறும் வழியையும் நம்பிக்கையற்றுத் தேடத் தொடங்குகிறாள்.
இருவரது இந்த அசாதாரண மனநிலைகளுமே இயல்பான பாலுறவை அவர்களுக்கு சாத்தியமற்றதாக மாற்றிவிடுகிறது. பாலுறவு என்பதையும் தாண்டி அவர்களுக்கிடையேயான உறவும்கூட இதனால் சீர்குலையத் தொடங்குகிறது. பரஸ்பரப் புரிதலும் அன்பும் இல்லாமல் வெறுமையும் வெறுப்பும் பழிசொல்லுதலுமே பிரதானமாக இருக்கும் உறவின் வழியாகக் கனிந்த பாலியல் உறவை மீட்பது அத்தனை எளிதானதல்ல. ஆனால், அதைச் செய்வதுதான் குழந்தையின்மை மருத்துவத்தில் முதல் படியாக இருக்க வேண்டும்.
இயந்திரத்தன பிணைப்பு கூடாது
குழந்தையின்மைக்கான இன்றைய மருத்துவம் அனைத்து வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் உடல் வாதைகளையும் மனவுளைச்சலையும் தரக்கூடியது. பரஸ்பர அன்பும் ஆதரவும் வேறு எப்போதையும்விட மிக அதிகமாக இருவருக்கும் தேவைப்படும் காலகட்டம் அது.
அதைக் கொடுக்கும் இடத்தில் இருவரும் இருக்க வேண்டும். நிபந்தனையற்ற உரையாடலும் முதிர்ச்சியான புரிதலும் சமரசமற்ற ப்ரியமும் அதற்கு அவசியமானது. உடல்களுக்கிடையேயான இயந்திரத்தனமான பிணைப்பை மட்டுமே கொண்ட பாலுறவில் அது சாத்தியமில்லை. மாறாக, மன ஒத்திசைவோடு அமைந்த பாலுறவே ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும். அதன் வழியே குழந்தை யின்மைக்கான தீர்வையும் நாம் அடைய முடியும்.
என்னிடம் வந்த தம்பதியினரிடம் அனைத்து பரிசோதனைகளையும் வைத்தியங்களையும் உடனடியாக நிறுத்தச் சொன்னேன். அவர்களின் பாலுறவு மீது திணிக்கப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டு, விரும்பும் நேரத்தில் இயல்பான பாலுறவை எந்த நிர்ப்பந்தங்களுமற்று அனுபவிக்கச் சொன்னேன். அது அவர்களின் குழந்தையின்மை நெருக்கடிகளிலிருந்து மட்டுமல்ல, அவர்களது மகத்தான உறவையும் நிச்சயம் மீட்டுக்கொண்டுவரும்.
- சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர், எழுத்தாளர்.
நன்றி : இந்துதமிழ்
அக்னி ஹோத்திரம்
அக்னி ஹோத்திரம்
“ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்

தியோ யோநஹ ப்ரசோதயாத்”
(எந்தஒளி நம் அறியாமை என்னும் இருளைப்போக்கி நம் அறிவுச்சுடரை தூண்டுகிறதோ அந்த மேலான ஒளியை தியானிப்போமாக!)
இன்றைய உலகில் மனிதன் மனஅழுத்தத்தாலும் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகளால் துன்பப்படுகிறான். நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் மாசுபட்டுவிட்டது. மனிதன் விஷக்காற்றை சுவாசித்து நோய்களால் வாடுகிறான். காற்று அந்த அளவுக்கு மாசுபட்டுவிட்டது. இந்த மாசுக்களை நீக்கவும், நாம்இந்த பூமியில் பிறந்ததால் ஏற்பட்ட பிறவிக்கடனை தீர்க்கவும், பஞ்சபூதங்களுக்கும் முழுமையான பிரதி உபகாரம் செய்யவும் நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமைதான் அக்னிஹோத்திரம் எனும் எளிய வேள்வியாகும். இவ்வேள்வியின் போது எழும் புகையானது நோய்களைக் குணமாக்கி, மனதை செம்மைப்படுத்துகிறது. சுற்றுச்சூழலை முற்றிலும் தூய்மையாக்குகிறது. தாவரங்களைச் செழிப்பாக வளரச்செய்கிறது. நோய்களுக்கு அக்னிஹோத்திர சாம்பல் மருந்தாக பயன்படும். நீரில் இச்சாம்பலைக் கலந்தால் நீர் சுத்தமாகிவிடும். எனவே இந்த அற்புத வேள்வியை தினமும் செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.
செய்முறை – (தேவையான பொருட்கள்)
சரியான அளவில் செய்யப்பட்ட செப்பு பிரமிடுவடிவ பாத்திரம். (semi copper pyramid pot) பசு நெய் வைக்கக் கிண்ணம், நெய் ஊற்றும் கரண்டி, பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டு.
சுத்தமான பசுவறட்டி - பசுவறட்டி பசுமாட்டின் தனி சாணத்தில் இருந்து தயாரிக்கவேண்டும். வேறு எதுவும் சாணத்தில் கலக்கக்கூடாது.
பசுநெய் - பசுநெய் மிகவும் தூயதாக இருக்கவேண்டும்.
முழுப்பச்சரிசி - கல், குருணை நீக்கப்பட்டு முனைமுறியாமல் முழு அரிசியாக இருக்கவேண்டும். செந்நிறமுள்ள சிவப்பு அரிசி (brownrice) சிறந்தது.
அக்னிஹோத்ரா வேள்வி தினமும் காலை ஸுர்யஉதய, அஸ்தமன வேளையில் செய்யவேண்டும்.
எளியசெய்முறை விளக்கம்:
அக்னிஹோத்ர பாத்திரத்தில் முறையாகப் பசுஞ்சாண வறட்டியை அடுக்கி அக்னியை வளர்க்க வேண்டும். பின்பு சரியான ஸீர்ய உதய நேரம் வந்தவுடன் கீழக்கண்ட மந்திரத்தைக் கூறி நெய் கலந்த அரிசியை அக்னியில் இடவேண்டும்.
காலை ஸீர்ய உதய மந்திரம்:
ஸீர்யாய ஸ்வாஹா ஸீர்யாய இதம் நமம! (ஒருபாகம் நெய்கலந்த அரிசியை அக்னியில் போடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம!
மாலைஸீர்ய அஸ்தமன நேரத்தில்:
அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
அக்னி ஜ்வாலை தானாக அணைந்தவுடன் சிறிது நெய்யை அவிசுகளின் மீதுவிட்டு ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ கூறி வேள்வியை முடித்துவிடலாம்.
ம்ருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பஹம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷிய மாம்ருதாத்!
(காலை, மாலை இரண்டுக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் பொதுவானது)
வேள்வியை செய்தவுடன் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராத்தனைகள் செய்யலாம். நம்முடைய வாழ்க்கை தேவைகள், காரியத்தடைகள் எல்லாவற்றையும் அக்னிமுன்பு சமர்ப்பணம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் காரியத்தில் வெற்றியும் பெறலாம். அக்னிபரிசுத்தத்தின் அடையாளம். உன்னதமான தூதுவன். எனவே எல்லாக்காரியங்களுக்கும் வெற்றி கிடைப்பது உறுதி.
வேள்வியை நிறைவுசெய்த பின்னர் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே 3 மணிநேரம் வைத்துவிட வேண்டும். இதனால் தொடர்ந்து சூரியன், அண்டவெளியில் இருந்து காஸ்மிக் எனர்ஜி (cosmic energy) நிறைய கவர்ந்து இழுக்கப்படுகிறது. மிகச்சிறந்த ஆற்றல்தளம் அதைச்சுற்றிப் பரவுகிறது. வேள்விபாத்திரத்தைச் சுற்றி மற்றவர்களும், நோயாளிகளும் உட்கார்ந்து வேள்விப்புகையை நன்கு சுவாசிக்க நோய்கள் விரைந்து குணமாகும் நோய்எதிர்ப்புச்சக்தி அதிரிக்கும். சக்கரங்கள் தூண்டப்பட்டு மனஅமைதி உருவாகும்.
முனிவர்களும், ரிஷிகளும் தினந்தோறும் தங்கள் முதற்கடமையாக அக்னிவேள்வியை மேற்கொண்டனர். அக்னிஹோத்ரா வேள்வி சுற்றுப்புறத்தில் பெரும்மாற்றத்தை உருவாக்கி அமைதி நிலையை ஏற்படுத்துகிறது. பரிசுத்தமான சூழல் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் சக்கரங்களும், சுசும்பநாடி உட்பட எல்லா நாடிகளும் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் நாம் தெளிந்த சிந்தனையும், ஆழ்மனசக்தியையும் முழுமையாகப் பயன்படுத்தமுடியும். இத்தகைய அக்னிவேள்வி மூலமே முனிவர்களும், ரிஷிகளும் யோகம், தியானம், மந்திரங்கள் போன்றவற்றை ஞானதிருஷ்டி மூலம் உணர்ந்து உருவாக்கிவைத்தனர். தம்மைச்சுற்றியும், சுற்றுப்புறத்திலும் சக்திதளத்தை உருவாக்கினர். இதற்கு அக்னிவேள்வி தூண்டுகோலாகச் செயல்படுகிறது. இன்று சாதாரண மனிதன் இதை தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் எல்லாவகையிலும் பயன்பெறமுடியும்! இன்றைய விஞ்ஞான யுகத்தில் மனிதனுக்கு பிரச்சனைகள், வாழ்க்கைத்தேவைகள், காரியத்தடைகள், துன்பமும், வறுமையும் பெரும் சுமையாகிவருகிறது. இவற்றையெல்லாம் போக்கி அமைதியாகவும், எல்லாவளங்களும் பெற்று வாழ்வதற்கு ஒரே வழி அக்னிஹோத்ரா மட்டுமே! சிறந்த தீர்வாகும்.
தாம்பத்ய சூப்
தாம்பத்ய உணர்வுகளை அதிகரிக்க உதவும் சூப்

couple
கொடிப் பசலைக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
கொடிப் பசலைக் கீரை - 200 கிராம்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
கார்ன் ஃபிளவர் - 3 ஸ்பூன்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
கார்ன் ஃபிளவர் - 3 ஸ்பூன்
செய்முறை
- முதலில் கொடிப் பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
- பின்பு கொடிப் பசலைக் கீரை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு அதில் பூண்டை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் மீதியுள்ள வெண்ணெய்யைப் போட்டு உருக்கி அதில் கார்ன் ஃபிளவரை போட்டு வதக்கி அதில் வடிகட்டி வைத்துள்ள சூப்பைக் கொட்டி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு உப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.
பயன்கள்
- இந்த சூப் காம உணர்வை அதிகரிக்க உதவும்.
- உடல் சூட்டை தணித்து மலச்சிக்கலையும் போக்கும். ஆனால் இந்த சூப்பை அதிகமாக குடித்தால் ஒரு சிலருக்கு கபத்தை அதிகரிக்கும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com