Home Base Learning

Home Base Learning

Thiruvilaku Pooja

 

திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?


திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளனஅவற்றை விவரமாக பார்ப்போம்.

1. 
திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு

2. 
தேவையான பொருட்கள்

3. 
பூஜைக்குத் தயாராகுதல்

4. 
கணபதி வாழ்த்து

5. 
தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல்

6. 
தேவி வாழ்த்து

7. 
திருவிளக்கு அகவல்

8. 
திருவிளக்குப் பாடல்

9. 
கலசபூஜை

10. 
அர்ச்சனை செய்யும் முறை

11. 
அர்ச்சனை 108

12. 
போற்றுதல் முறை

13. 
போற்றுதல் 108

14. 
நிவேத்யம்

15. 
பாட்டு

16. 
தீபாராதனை

17. 
வலம்வருதல்

18. 
மங்களம்

19. 
பிரார்த்தனை

1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு

திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறதுகன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர்வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும்சஞ்சலமும் வறுமையும் நீங்கும்சக்தியும் வளமையும் நிறையும்பேய்பிசாசுபில்லிசூனியம் அணுகாது.

ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும்ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும்அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும்அன்பும்அறனும்அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.


2. தேவையான பொருட்கள்

திருவிளக்குவாழை இலைவெற்றிலைபாக்குநிவேதனப்பொருட்களான பழம்அவல்பொரிகற்கண்டு முதலியனதிருநீறுகுங்குமம்சந்தனம்உதிரி பூஊதுபத்திதுளசிகற்பூரம்ஊதுபத்தி வைக்கும் தட்டுகற்பூரத்தட்டுஎண்ணெய் திரிதீப்பெட்டிஒரு செம்பு தீர்த்தம் (கலசம்)அரிசிமஞ்சள் முதலியன.


3. பூஜைக்குத் தயாராகுதல்

(i) 
திருவிளக்கை சுத்தம் செய்தல்

திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கிதூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும்.

(ii) 
பீடம் அமைத்தல்

திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும்திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும்.

(iii) 
அலங்காரம் செய்தல்

திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம்குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும்.

(iv) 
பூஜைக்கு அமருதல்

திருவிளக்கில் எண்ணெய்விட்டுகுறைந்தபட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும்திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும்ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும்நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாதுகற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும்கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம்ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது.

பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும்திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் சொல்லுக ஓம்.

ஸர்வே பவந்து ஸகின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்
4. கணபதி வாழ்த்து


(i) 
ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

(ii) 
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமிவிக்னேஸ்வர பாதபங்கஜம்

ஓம் ஸுமுகாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விக்ன ராஜாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கணாத்யஷாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ஸர்ப்பகர்ணாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ரபரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி


5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்செய்தல்

கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுகஅதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும்.

தீபம் ஏற்றும்போது

''
ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''

என்று சொல்ல வேண்டும்ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.

''
ஆதிபராசக்தி அம்பிகையேநாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''.

6. தேவி வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே


7. திருவிளக்கு அகவல்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன்.

8. திருவிளக்குப் பாடல்

(
ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு)

மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்குதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே
இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவே
இல்லம் தன்னில் விளக்கினையே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மை பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.

9. கலச பூஜை

கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசிமஞ்சள்இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டுஇம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

''கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு''

பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும்பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்துபுஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.

பின் கீழ்வருமாறு சொல்லுக :

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

10. அர்ச்சனை செய்யும் முறை

ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்துஇடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்துவிளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும்முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நமஎன்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.

11. அர்ச்சனை 108

1. 
ஓம் சிவாயை நம:
2. 
ஓம் சிவசக்த்யை நம:
3. 
ஓம் இச்சா சக்த்யை நம:
4. 
ஓம் க்ரியா சக்த்யை நம:
5. 
ஓம் ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம:
6. 
ஓம் ஜ்யோதி லக்ஷ்ம்யை நம:
7. 
ஓம் தீப லக்ஷ்ம்யை நம:
8. 
ஓம் மகா லக்ஷ்ம்யை நம:
9. 
ஓம் தன லக்ஷ்ம்யை நம:
10. 
ஓம் தான்ய லக்ஷ்ம்யை நம:
11. 
ஓம் தைர்ய லக்ஷ்ம்யை நம:
12. 
ஓம் வீர லக்ஷ்ம்யை நம:
13. 
ஓம் விஜய லக்ஷ்ம்யை நம:
14. 
ஓம் வித்யா லக்ஷ்ம்யை நம:
15. 
ஓம் ஜய லக்ஷ்ம்யை நம:
16. 
ஓம் வர லக்ஷ்ம்யை நம:
17. 
ஓம் கஜ லக்ஷ்ம்யை நம:
18. 
ஓம் காம வல்யை நம:
19. 
ஓம் காமாக்ஷி ஸுந்தர்யை நம:
20. 
ஓம் சுப லக்ஷ்ம்யை நம:
21. 
ஓம் ராஜ லக்ஷ்ம்யை நம:
22. 
ஓம் க்ருஹ லக்ஷ்ம்யை நம:
23. 
ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம:
24. 
ஓம் சீதா லக்ஷ்ம்யை நம:
25. 
ஓம் ஸர்வ மங்கள காரிண்யை நம:
26. 
ஓம் ஸர்வ துக்க நிவாரிண்யை நம:
27. 
ஓம் ஸர்வாங்க ஸந்தர்யை நம:
28. 
ஓம் ஸெளபாக்ய லக்ஷ்ம்யை நம:
29. 
ஓம் ஆதி லக்ஷ்ம்யை நம:
30. 
ஓம் ஸந்தான லக்ஷ்ம்யை நம:
31. 
ஓம் ஆனந்த ஸ்வரூபிண்யை நம:
32. 
ஓம் அகிலாண்ட நாயக்யை நம:
33. 
ஓம் பிரம்மாண்ட நாயக்கை நம:
34. 
ஓம் ஸுரப்யை நம:
35. 
ஓம் பரமாத்மிகாயை நம:
36. 
ஓம் பத்மாலயாயை நம:
37. 
ஓம் பத்மாயை நம:
38. 
ஓம் தன்யாயை நம:
39. 
ஓம் ஹிரண்மய்யை நம:
40. 
ஓம் நித்யபுஷ்டாயை நம:
41. 
ஓம் தீப்தாயை நம:
42. 
ஓம் வஸுதாயை நம:
43. 
ஓம் வஸுதாரிண்யை நம:
44. 
ஓம் கமலாயை நம:
45. 
ஓம் காந்தாயை நம:
46. 
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
47. 
ஓம் அனகாயை நம:
48. 
ஓம் ஹரிவல்லபாயை நம:
49. 
ஓம் அசோகாயை நம:
50. 
ஓம் அம்ருதாயை நம:
51. 
ஓம் துர்க்காயை நம:
52. 
ஓம் நாராயண்யை நம:
53. 
ஓம் மங்கல்யாயை நம:
54. 
ஓம் கிருஷ்ணாயை நம:
55. 
ஓம் கன்யாகுமார்யை நம:
56. 
ஓம் ப்ரஸன்னாயை நம:
57. 
ஓம் கீர்த்யை நம:
58. 
ஓம் ஸ்ரீயை நம:
59. 
ஓம் மோஹ நாசின்யை நம:
60. 
ஓம் அபம்ருத்யு நாசின்யை நம:
61. 
ஓம் வியாதி நாசின்யை நம:
62. 
ஓம் தாரித்ரிய நாசின்யை நம:
63. 
ஓம் பயநாசின்யை நம:
64. 
ஓம் சரண்யாயை நம:
65. 
ஓம் ஆரோக்யதாயை நம:
66. 
ஓம் ஸரஸ்வத்யை நம:
67. 
ஓம் மஹாமாயாயை நம:
68. 
ஓம் புஸ்தக ஹஸ்தாயை நம:
69. 
ஓம் ஜ்ஞான முத்ராயை நம:
70. 
ஓம் ராமாயை நம:
71. 
ஓம் விமலாயை நம:
72. 
ஓம் வைஷ்ணவ்யை நம:
73. 
ஓம் ஸாவித்ரியை நம:
74. 
ஓம் வாக்தேவ்யை நம:
75. 
ஓம் பாரத்யை நம:
76. 
ஓம் கோவிந்த ரூபிண்யை நம:
77. 
ஓம் சுபத்ராயை நம:
78. 
ஓம் திரிகுணாயை நம:
79. 
ஓம் அம்பிகாயை நம:
80. 
ஓம் நிரஞ்ஜனாயை நம:
81. 
ஓம் நித்யாயை நம:
82. 
ஓம் கோமத்யை நம:
83. 
ஓம் மஹாபலாயை நம:
84. 
ஓம் ஹம்ஸாஸனாயை நம:
85. 
ஓம் வேதமாத்ரே நம:
86. 
ஓம் சாரதாயை நம:
87. 
ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
88. 
ஓம் சர்வாபாணபூ ஷிதாயை நம:
89. 
ஓம் மஹாசக்த்யை நம:
90. 
ஓம் பவான்யை நம:
91. 
ஓம் பக்திப்பிரியாயை நம:
92. 
ஓம் சாம்பவ்யை நம:
93. 
ஓம் நிர்மலாயை நம:
94. 
ஓம் சாந்தாயை நம:
95. 
ஓம் நித்ய முக்தாயை நம:
96. 
ஓம் நிஷ்களங்காயை நம:
97. 
ஓம் பாபநாசின்யை நம:
98. 
ஓம் பேதநாசின்யை நம:
99. 
ஓம் ஸுகப்ரதாயை நம:
100. 
ஓம் ஸர்வேச்வர்யை நம:
101. 
ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை நம:
102. 
ஓம் மனோன்மன்யை நம:
103. 
ஓம் மஹேச்வர்யை நம:
104. 
ஓம் கல்யாண்யை நம:
105. 
ஓம் ராஜராஜேச்வர்யை நம:
106. 
ஓம் பாலாயை நம:
107. 
ஓம் தர்ம வர்த்தின்யை நம:
108. 
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

பின் பூக்களை எடுத்து நெஞ்சோடு சேர்த்து வைத்து:-

ஓம் நானாவித மந்த்ர பரிமள பத்ர
புஷ்பாணி சமர்ப்பயாமி.

12. போற்றுதல் முறை

எல்லோரும் இருகரம் கூப்பிதிருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதவேண்டும்கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.

13. போற்றுதல் 108

1. 
பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. 
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. 
முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. 
மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
5. 
வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. 
இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. 
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
8. 
பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
9. 
பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. 
பேரருட் கடலாம் பொருளே போற்றி
11. 
முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
12. 
மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
13. 
அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
14. 
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. 
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. 
இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
17. 
மங்கள நாயகி மாமணி போற்றி
18. 
வளமை நல்கும் வல்லியை போற்றி
19. 
அறம்வளர் நாயகி அம்மே போற்றி
20. 
மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
21. 
மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. 
தையல் நாயகித் தாயே போற்றி
23. 
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
24. 
முக்கட்சுடரின் முதல்வி போற்றி
25. 
ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. 
சூளாமணியே சுடரொளி போற்றி
27. 
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
28. 
அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. 
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. 
இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. 
சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. 
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. 
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. 
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. 
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
36. 
தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
37. 
ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
38. 
ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
39. 
இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. 
சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
41. 
பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. 
நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. 
உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. 
உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
45. 
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
46. 
உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. 
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
48. 
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. 
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. 
நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. 
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. 
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
53. 
ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. 
தில்லைப் பொது நட விளக்கே போற்றி
55. 
கருணையே உருவாம் விளக்கே போற்றி
56. 
கற்பனை கடந்த ஜோதி போற்றி
57. 
அற்புதக்கோல விளக்கே போற்றி
58. 
அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. 
சிற்பர வியோம விளக்கே போற்றி
60. 
பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
61. 
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
62. 
கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
63. 
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. 
பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
65. 
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
66. 
அருவே உருவே அருவுரு போற்றி
67. 
நந்தா விளக்கே நாயகியே போற்றி
68. 
செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
69. 
தீபமங்கள் ஜோதி போற்றி
70. 
மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
71. 
பாகம் பிரியா பராபரை போற்றி
72. 
ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
73. 
ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
74. 
ஊழி ஊழி உள்ளோய் போற்றி
75. 
ஆழியான் காணா அடியோய் போற்றி
76. 
ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
77. 
அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. 
முந்தைய வினையை முடிப்போய் போற்றி
79. 
பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
80. 
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
81. 
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. 
இருநில மக்கள் இறைவி போற்றி
83. 
குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
84. 
ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. 
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
86. 
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. 
எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
88. 
அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
89. 
தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
90. 
ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
91. 
ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
92. 
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. 
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. 
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
95. 
செல்வாய செல்வம் தருவாய் போற்றி
96. 
பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
97. 
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. 
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. 
செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
100. 
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
101. 
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. 
நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. 
தாயே நின்னருள் தருவாய் போற்றி
104. 
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
105. 
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. 
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. 
போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
108. 
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

14. நிவேத்யம்

நிவேத்யப் பொருள்களை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்எல்லோரும் சொல்லுக.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா

பின் கீழ் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை நிவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹாஅபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹாஉதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா பிரம்மணே ஸ்வாஹா

15. பாட்டு


ராமன் பிறந்தது நவமியிலே
நட்ட நடுப்பகல் வேளையிலே
கண்ணன் பிறந்தது அஷ்டமியில்
காரிருள் நடுநிசி வேளையிலே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)


ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய் பார்த்தனர் மக்கள் எல்லாம்
கண்ணன் பிறந்தது கடுஞ்சிறையில்
கண்டவர் தாயும் தந்தையுமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)


சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன் பெருமை சேர்த்திடவே
சந்திர குலத்தில் கண்ணனுமே
வளர்ந்தனன் பெருமை தந்திடவே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)


மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டினான் ராமனுமே
மாயாஜாலம் பல புரிந்து
காட்டினன் நீலக்கண்ணனுமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)


ராமன் பெற்ற குணங்களெல்லாம்
நாமும் பெற்று மகிழ்ந்திடவே
கண்ணன் கீதையில் கூறியதை
கருத்தில் கொண்டு உயர்ந்திடுவோம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)


வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய கண்ணனையும்
வாழ்வில் என்றும் மறவோமே
மறவோம் மறவோம் மறவோமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் ஸ்ரீராம்
ஜெயராம் ஜெய ஜெயராம் ஸ்ரீராம் ஜெயராம்

ஜெய ஜெயராம்



கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

(
அம்மா...கற்பூர)

கண்ணிரண்டு உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டு உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளை நீ தீருமம்மா

(
அம்மா...கற்பூர)

நெற்றியினில் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் உன் திருநாமம் நிலவவேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம் நீடுழி வாழவேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை எனைத் தள்ளலாமா

(
அம்மா...கற்பூர)

16. 
தீபாராதனை

எல்லோரும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுகதிருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்கற்பூரம் காட்டும்போது எல்லோரும் சேர்ந்து சொல்லுக.

திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ
சுங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே

பின் திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கற்பூர தீபத்தைத் தொட்டு கண்ணிலும் தலையிலும் நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும்பக்தர்கள் கற்பூர தீபத்தை தொட்டுக்கொள்ளநின்ற இடத்தில் நின்றவாறே கொடுக்க வேண்டும்.

பின் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று வலம்வரத் தயாராக வேண்டும்.

17. திருவிளக்குகளை வலம் வருதுல்

எல்லோருமாக தேவி நாமம் கைதட்டிப் பாடிக்கொண்டு மூன்று முறை வலம் வருக.

நாமம்:-

ஜெய் ஜெய் தேவி
ஜெய் ஸ்ரீ தேவி

பின் நமஸ்காரம் செய்து அமர்ந்து மங்களம் பாடி நிறைவு செய்க.


18. மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்-தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம்-ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்-வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம்-ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்


19. பிரார்த்தனை

கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதைக் காணுகஅமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக வாழ்கஎல்லோரும் நோயின்றி வாழ்கஎல்லோருக்கும் மங்களம் உண்டாகுகஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்துவாயாக
அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழி நடத்துவாயாக
மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக

ஓம் பூர்ணமதபூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!

ஓம் சாந்திசாந்திசாந்தி

இரண்டு நிமிஷம் தியானம் செய்க 'ஹரி ஓம் தத் ஸத்எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.

பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

(அர்ச்சனை செய்த மலர்களைக் காலால் மிதிக்காமல் நீர் நிலைகளிலோ சுத்தமான இடங்களிலோ போடவும்தீர்த்த ஜலத்தை கால் மிதிபடாத இடத்தில் கொட்டவும்).


நன்றிசுவாமி மதுரானந்தர்!


ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா


ஒரு மனிதனுக்கு சாப்பாடு, வேலை, பணம் இவையெல்லாம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நிம்மதியான தூக்கமும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில் பிற அத்தியாவசியங்கள் அனைத்தையும் பணத்தால் பெற முடிந்த ஒருவரால் நிம்மதியான தூக்கத்தை மட்டும் பெற முடியவில்லை. நிம்மதியான தூக்கம் ஒன்றே, ஒருவரை நீடித்த ஆயுளுடனும், ஆரோக்கியமான உடலுடனும் வைத்திருக்கும். என்ன மருந்து சாப்பிட்டாலும் தூக்கம் மட்டும் வரவில்லை என புலம்புவோர் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இப்போது ஒரு ரகசியம் சொல்ல போகிறேன். செலவே இல்லாமல், நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கான வழி தான் அது வாருங்கள் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...


ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அதற்கு நித்திரை யோகா உதவும். யோகாசனங்களிலேயே, ஒரு நிதானமான நிலையை கொண்டது தான் நித்திரை யோகா. ஆனால், இதில் கிடைக்கும் பலன்களோ ஏராளம். ஒவ்வொரு முறை நித்திரை யோகாவை செய்யும் போதும், உங்களது மனமானது அமைதியான நிலைக்கு சென்று ஆழ்ந்த தூக்கத்திற்குள் அழைத்து சென்றுவிடும். சாதாரண தூங்கும் நிலையில், மனதை ஆழ்ந்த நிலைக்கு அழைத்து செல்லும் ஒரு சக்தி வாய்ந்த முறை தான் இந்த நித்திரை யோகா. ஒருவர் சுயநினைவில் இருக்கும் போது, ஆழ்ந்த தூக்கத்தின் பலனை எளிதாக பெற்றிடலாம். மிகவும் சுலபமான யோகாவான இதனை செய்வதன் மூலம் மனதிற்கும், உடலிற்கும் நல்ல பலனை பெற்றிட முடியும்.

நித்திரை யோகாவானது, ஒருவர் எழுந்திருக்கும் போதே, அவரது ஆழ் மனது மற்றும் மயக்க நிலை வழியாக வழிநடத்தக்கூடியது. இங்கே, நித்திரை யோகாவினால் கிடைக்கக்கூடிய பிற நன்மைகள் என்று வல்லுநர்களே கூறியவை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தூக்கத்தை தூண்டும் தூக்கமின்மை தான் உடலின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் முதல் மனஅழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளுக்கு தூக்கமின்மை தான் காரணம். ஒவ்வொரு நாளும் போதுமான தூக்கம் என்பது ஆரோக்கியமான உடல் நலனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. தினசரி தூங்குவதற்கு முன்பு நித்திரை யோகா செய்து விட்டு, தூங்கினால் நல்ல தூக்கத்தை பெற்றிடலாம். இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், இடது மற்றும் வலது மூளைகளுக்கிடையே சமநிலையை உருவாக்கி அலைநீளங்களை மெல்ல மெல்ல குறைத்திடும். மனஅழுத்தத்தை குறைக்கும் இன்றைய பரபரப்பான உலகில் மனஅழுத்தம் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதனால் தான் நித்திரை யோகாவை செய்வது மிகவும் தேவையான ஒன்று என்று கூறுகிறோம். இதன்மூலம், உடலின் உணர்வுகளை தெரியப்படுத்தி, மனஅழுத்தத்தை குறைத்திட உதவும். சர்வதேச யோகா இதழில் வெளியான ஆய்வின் அடிப்படையில், தொடர்ந்து நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம், மனஅழுத்தம் குறைந்து, பதற்றம் மற்றும் மனசோர்வு நீங்குவது தெரிய வந்துள்ளது. நாள்பட்ட வலிகளை குறைக்கும் நாள்பட்ட வலியால் அவதிப்படுபவர்கள் நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் வலி குறைவதை உணர்ந்திடலாம். வல்லுநர்களின் கூற்றின் படி, நித்திரை யோகாவானது, உடலுக்கு ஓய்வெடுக்கவும், மீட்டெடுக்கவும் நேரம் அளிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கத்தை குறைத்திடும். வலி இருக்கும் பாதையில், நோய்எதிர்ப்பு செல்களை செலுத்தி அழற்சி எதிர்ப்பு திறன் மூலம் காயத்தை விரைந்து குணப்படுத்திட உதவும். டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகளை குறைத்திடும் டைப் 2 நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்நாள் நோயாகும். இது உங்கள் உடலை இன்சுலின் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கிறது. டைப் -2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள நித்திரை யோகா நிச்சயம் உதவும். ஏனென்றால், இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்காலஜி அண்ட் பார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், நித்திரை யோகா நீரிழிவு நோயின் அறிகுறிகளை போக்குவதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதும் தெரிய வந்துள்ளது.

உள் மனதுடன் இணைக்கும் நித்திரை யோகா செய்வதன் மூலம், மனதில் ஒரு அமைதியை நிலைநிறுத்தி, ஆன்மாவுடன் கலந்து, உள் மனத்துடன் இணைய செய்திடும். தீய எண்ணங்களிடம் இருந்து மனதை காத்து, சாந்தப்படுத்துவதற்கான ஒரே வழி தான் நித்திரை யோகா. இந்த யோகா பயிற்சி செய்ய தொடங்கிய பின்பு, தேவையற்ற செயல்களை புறக்கணிக்க தொடங்குவதை நீங்களே உணரலாம். அதிர்ச்சியில் இருந்து மீள உதவும் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களில் இருந்து மீள முடியாமல் தினந்தோறும் அவதிக்குள்ளாகுபவர்களை நிறைய பார்த்திருப்போம். சில அறிக்கைகளின் அடிப்படையில், நித்திரை யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் மனமானது, ஆழ்ந்த மற்றும் அமைதியான ஓய்வை பெறுகிறது. ஒரு ஆய்வறிக்கையின்படி, அதிர்ச்சி சம்பவங்களால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள், அதிலிருந்து வெளிவர நித்திரை யோகா உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. நித்திரை யோகா செய்வது எப்படி? * ஒரு தெளிவான நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து, முதுகு கீழே படும் படி நேராக படுத்துக் கொள்ளவும். * இருபுறமும் கைகளை பக்கவாட்டில் நீட்டிக் கொள்ளவும். * கண்களை மூடி ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக் கொள்ளவும். * இப்போது, வலது காலை கவனிக்கத் தொடங்கவும். * முதலில், வலது காலின் கீழிலிருந்து படிப்படியாக, முழங்கால், தொடை, இடுப்பு மற்றும் முழு காலிலும் கவனத்தை செலுத்துங்கள். * மனம் ஒருநிலைப்படுவதை நீங்கள் உணருவீர்கள். மனம் தானாக ஓய்வு நிலைக்கு செல்லும். * மனதை ஓய்வெடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது. அது நித்திரை யோகாவிற்கு எதிரானது. * இப்போது, வலது காலை போலவே இடது காலிலும் செய்யவும். * முழு ஓய்வு நிலைக்கு செல்லும் வரை, உங்களுக்கு போதுமான நேரம் வரை இதனை தொடர்ந்து செய்யவும்

அதிகமா உடற்பயிற்சி செய்வீங்களா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுஎன்பார்கள்இது உணவுக்கு மட்டுமல்ல மூளைக்கும் சேர்த்து தான் என்கிறார்கள் மருத்துவர்கள்உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்று தெரியும்இதுவே நீங்கள் அதிக உடற்பயிற்சி செய்பவராக இருந்தாஉங்க மூளை நலன் பாதிக்கப்படுமாம்.
 மூளை திறன் குறைதல்
இது குறித்து தற்போது நடந்த ஆய்வின் படி உங்களுடைய சிந்தனைகள்புரிந்து கொள்ளும் திறன் பலவீனப்படுகிறது என்கிறார்கள்இதற்கு விஞ்ஞானிகள் 'ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்என்று பெயரிட்டுள்ளனர்அதிக உடற்பயிற்சி உடலை பாதிக்கிறதோ இல்லையோ உங்க மூளையை பாதிக்கிறதுஇதனால் உங்க மூளை நரம்புகள் சோர்வாகக் கூடும்இதைப் பற்றி இன்னும் விளக்கமாக காணலாம்.

மூளை திறன் குறைதல்
அதிக உடற்பயிற்சி செய்யும் போது ஒருவரின் சிந்தனையும் முடிவு எடுக்கும் திறனும் மங்கிப் போய்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனஇதனால் மூளை திறன் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதுஎவ்வளவு குறைவு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறிய இயலாதாம்.

விளையாட்டு வீரர்களுடனான ஆய்வு
உயிரியல் பத்திரிக்கையில் வெளியிட்ட ஆராய்ச்சி படிஇந்த ஆராய்ச்சிக்காக 35 வயதை அடைந்த 37 ஆண் விளையாட்டு வீரர்களை பரிசோதித்தனர்அவர்களை வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் படி கூறினர். 3 வாரங்களுக்கு பிறகு அவர்களின் உடற்பயிற்சியை 40 % வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டதுபிறகு அவர்களிடம் எம்ஆர் ஸ்கேன் செய்யப்பட்டதுஅப்பொழுது தான் அவர்களின் மூளையின் சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் குறைந்திருப்பது ஸ்கேனிங்கில் தெரிய வந்துள்ளது.
தீமைகள்
மூளையின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படும்
விளையாட்டு வீரர்களின் எம்.ஆர். ஸ்கேன் பார்க்கும்போது, ​​அதிக உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு மூளையின் பின்பகுதி பாதிக்கப்படுகிறதுமூளையின் இந்த பகுதி தான் முடிவுகளை எடுப்பதுவிஷயங்களுக்கு இடையில் சரியானது எது தவறு எது என்பதைத் தேர்ந்தெடுப்பதுநடத்தை கட்டுப்பாடு மற்றும் உந்துதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஅதே நேரத்தில் இந்த பகுதி சில வேலைகளையும் தூண்டி விடுகிறதுஎனவே பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் பிற்காலத்தில் எரிச்சலாகவும் பொறுப்பற்றவர்களாகவும் மாறுகிறார்கள்.
மூளையின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படும்
தீமைகள்
நம் உடல் திறனை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தால் இன்னும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்அவையாவன:
முதுகு வலி மற்றும் அங்குள்ள தசைகள் கிழிய வாய்ப்புள்ளது.
தோல் தளர்வு ஏற்படும்
சரும வடுக்கள் மற்றும் சரும நோய்கள் தென்படும்
மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவு பிரச்சனைகள்
களைப்பாக சோர்வாக எல்லா நேரமும் இருப்பீர்கள்
எனவே உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து மூளையைக் காப்பாற்றுங்கள்